என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வைகை அணைகள்
நீங்கள் தேடியது "வைகை அணைகள்"
நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.
56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது.
நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது
பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.
56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது.
நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது
பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
கூடலூர்:
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 5653 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1800 கன அடி திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 1169 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 1782 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 129.68 அடியாகவும் உள்ளது.
பெரியாறு 84, தேக்கடி 65, கூடலூர் 10.2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 2.5, மஞ்சளாறு 5, வைகை அணை 7.4, சோத்துப்பாறை 3, மருதாநதி 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 5653 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1800 கன அடி திறக்கப்படுகிறது.
இதில் 1400 கன அடி மின்சார உற்பத்திக்கும், 400 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 1169 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 1782 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 129.68 அடியாகவும் உள்ளது.
பெரியாறு 84, தேக்கடி 65, கூடலூர் 10.2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 2.5, மஞ்சளாறு 5, வைகை அணை 7.4, சோத்துப்பாறை 3, மருதாநதி 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. #periyardam #southeastmonsoon
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேறறு முன்தினம் 121.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று காலை 4 அடி வரை உயர்ந்து 125 அடியாக அதிகரித்தது.
பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும் அணையில் நீர் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் கம்பம், கூடலூர், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. சின்னமனூர், பாலார்பட்டி, மார்க்கையன்கோட்டை ஆகிய பகுதிகளில் முதல் போகத்திற்கான நாற்றங்கால் நடவு பணி தொடங்கியுள்ளது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு, வருஷநாடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணை நீர் மட்டம் 37.57 அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு 1071 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 768 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறில் 58 மி.மீ, தேக்கடியில் 12.4 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என்பதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. #periyardam #southeastmonsoon
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேறறு முன்தினம் 121.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று காலை 4 அடி வரை உயர்ந்து 125 அடியாக அதிகரித்தது.
நேற்று 9,479 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில் இன்று காலை 4,824 கன அடியாக குறைந்தது. இருந்தபோதும் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 126.10 அடியாக அதிகரித்துள்ளது.
பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும் அணையில் நீர் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் கம்பம், கூடலூர், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. சின்னமனூர், பாலார்பட்டி, மார்க்கையன்கோட்டை ஆகிய பகுதிகளில் முதல் போகத்திற்கான நாற்றங்கால் நடவு பணி தொடங்கியுள்ளது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு, வருஷநாடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணை நீர் மட்டம் 37.57 அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு 1071 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 768 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறில் 58 மி.மீ, தேக்கடியில் 12.4 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என்பதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. #periyardam #southeastmonsoon
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X